திங்கள், 17 ஆகஸ்ட், 2009

சென்னையில் தடை இல்லா போக்குவரத்து





பொதுவாக எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிழற்குடையின் கீழ் நின்று பயணம் செய்வதில்லை. பெருந்தை எப்படியவது பிடித்து விட வேண்டும் என்பதற்காக சாலைக்கே வந்து நின்று கொள்கிறாற்கள். சாலையின் பெரும்பகுதியை பயணிகள் அடைத்துக் கொள்வதாள் பெருந்த்தை சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டி உள்ளது. சாலை குறுக்கிடுவதால் பின்னால் வரும் வாகணங்கள் விரைவாக சாலையை கடக்க முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இதே நிலையை ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நாம் கண்கூடாக காணலாம். பெருந்து நிறுத்தத்தில் சிலர் கடை வைத்து இருப்பர், சிலரோ வண்டியை நிறுத்தி இருப்பர், சிலரோ தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வர். இவர்களைக் கட்டுப்படுத்த காவலர் தேவைப் படுவார்.காவலர் சென்றவுடன் இப்பிரச்சினை தொடர்கதையாகும்.. காவலர் அவசியம் இல்லமலே சுயமாக இப்பிரச்சனைக்கு தீர்வு கண இதோ ஓர் எளிய வழி..

எல்லா பெருந்துகளிலும் முதல் படிக்கட்டை நீக்கிவிடவேண்டும். முதல் படிக்கட்டின் உயரத்திற்கு (அதாவது ஒரு அடி அதிமாக) பிளாட்பாரம் அமைத்துக் கொள்ளவேண்டும். பயணிகள் ஏற இறங்க வசதியாக பிளாட்பாரம் நீளமாகவும் அகலமாகவும் இருக்க வேண்டும். முதல் படிக்கட்டு இல்லாததால் பெருந்தில் ஏற இறங்க பயணிகள் நிச்சயமாக பிளாட்பாரத்தில்தான் நின்றாக வேண்டும். அதே நேரம் பயணிகளை இறக்கிவிட பேருந்து பிளாட்பாரம் அருகில் வந்தால்தான் முடியும். பயணிகள் பிளாட்பரத்தை மட்டும் பயன்படுத்துவதல் பேருந்தை பிளாட்பாரத்தை ஒட்டி நிறுத்த ஏதுவக இருக்கும். பேருந்து நின்று செல்லும் இடம் உறுதியானதால் அங்கே கடைகள் போடவோ, வண்டிகள், ஆட்டோக்கள் நிறுத்தவோ நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை. இத்திட்டம் தடை இல்லா சாலை போக்குவரத்திற்கு வழிவகுக்கும். இப்படிப்பட்ட இடங்களில் காவல்துறையின் சேவை தேவை இருக்காது.

பேருந்த்தில் படிக்கட்டு ஒன்று குறைவதால் விரைவாக ஏறி இறங்கலாம். சாலை சந்திப்புகளில் மக்கள் ஏறி இறங்க வாய்ப்பு இல்லை. கண்ட இடங்களில் எல்லாம் கையைக் காட்டி பேருந்த்தினுள் ஏற முடியாது. ஒட்டுனருக்கும், பயணிகளுக்கும் சுய கட்டுப்பாட்டை உருவாக்கும்.

மாற்றுக் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.