ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

கொசு இல்லா கூவம்






ஒரு அங்குல பைப்பில் ஒடும் தண்ணிரை மூண்று அங்குல அகலம் உள்ள கால்வாயில் விடும் போது அந்த தண்ணிர் தேங்காமல் ஒடுவதாக வைத்துக் கொள்வோம். அதே தண்ணிரை 10 அடி அகலம் கொண்ட கல்வாயில் விட்டால் தண்ணிர் ஒடுவதற்கு பதிலாக தேங்கி மெதுவக செல்லுமல்லவா??. ஆக ஆற்றில் கலக்கபடும் கழிவு நீரின் அளவும், ஆற்றின் அகலமும் 1:3 என்ற விகிதத்தில் இருந்தால்தான் கழிவு நீர் வேகமாக ஓடி கடலில் கலக்கும். நடைமுறையில் பார்த்தால் கலக்கும் கழிவு நீருக்கும் அதன் அகலத்திற்கும் உள்ள விகிதம் கிட்டதட்ட 1;30 என்றிருகிறது. எனவேதான் கழிவு நீர் மெதுவக சென்று கடலில் கலக்கிறது. கழிவு நீர் கலப்பதால் கொசுவும் உற்பத்தியாக ஏதுவாகிறது. அரசும் கொசுவை ஓழிக்க நடவடிக்கை மேல் நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை. இதற்கு தீர்வுதான் என்ன???

கூவம் ஆற்றை எடுத்துக் கொள்வோம். ஆற்றின் இரு கரைகளையும் ஒட்டினால் போல் கழிவு நீரின் அளவுக்கு ஏற்ப கால்வாய் அமைத்துக் கொள்ள வேண்டும். துவக்கத்தில் சிறியதாகவும் கடலை நெருங்க நெருங்க கால்வாயின் அளவு கழிவு நீரின் அளவிற்கேற்ப பெரிதாகவும் அமைதுக் கொள்ள வேண்டும். கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் பக்கவாட்டிலேயே சென்று விடுவதால் ஆற்றின் நடுப்பகுதி சுத்தமாக காணப்படும். மழைக்காலங்கலில் அல்லது மழை பெய்யும் பொழுது பக்கவட்டு கால்வாய் நிரம்பி வழிந்து மழை நீரும் கழிவு நீரும் ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து வேகமாய் ஓடி கடலில் கலக்கும்.மழை நின்றவுடன் கழிவு நீர் பக்க கால்வயில் வழக்கம் போல் ஓடி கடலிலும்,ஆற்று நீர் அடுத்த சில வாரங்களில் வெயிலால் உறிச்சப்பட்டு வற்றி சுத்தமாகவும் காணப்படும்.

சென்னை மக்கள் வெளியேற்றும் கழிவு நீர் ஆற்றின் கொள்ளளவை விட கிட்டதட்ட 30 மடங்கு குறைவு தான். மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் சுமந்து செல்ல வேண்டும் என்பதால் ஆற்றின் அகலம் அதிகமாக தேவை. கழிவு நீர் பக்கவாட்டிலும் எரியில் இருந்து வெளி வரும் நல்ல நீர் நடுவிலும் சென்று கடலில் கலக்குமாறு செய்திடலாம். இங்கு நல்ல நீர் மக்களின் பயன்பாட்டிற்கும் கழிவு நீர் கடலுக்குமாக பிரிந்து விடும். தேவை எனில் கடலில் கலக்கும்முன் சுத்தப்படுத்திக் கொள்ளலாம் இதே முறையை பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றிலும் பின்பற்றி மருந்து தெளிக்காமல் கொசு தானாக ஒழிந்து விடும். மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்பதில் ஐயமில்லை. கொசுவிலிருந்து மக்களை காப்பாற்றிய தமிழக அரசை நிச்சயமாக இவ்வுலகம் பாராட்டும்.

கீழே கொசு இல்லா கூவத்தின் மதிரியை இனைத்துள்ளேன்.



1 கருத்து: